sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கலை திருவிழாவில் பயிற்சி விநாயகர் சிலை வடிக்க முயற்சி

/

கலை திருவிழாவில் பயிற்சி விநாயகர் சிலை வடிக்க முயற்சி

கலை திருவிழாவில் பயிற்சி விநாயகர் சிலை வடிக்க முயற்சி

கலை திருவிழாவில் பயிற்சி விநாயகர் சிலை வடிக்க முயற்சி


ADDED : ஆக 25, 2025 01:36 AM

Google News

ADDED : ஆக 25, 2025 01:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பட்டு: பெற்ற பயிற்சியின் தொடர்ச்சியாக, தற்போது விநாயகர் சிலை தயாரிக்கும் முயற்சியில் மாணவர் ஈடுபட்டு வருகிறார்.

அரசு பள்ளிகளில் ஆண்டுதோறும் கலை திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதில், பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

களிமண் சிற்பம், மணல் சிற்பம் செய்வது உள்ளிட்ட போட்டிகளும் இதில் இடம்பெறுகின்றன.

நடப்பாண்டு பள்ளிகள் அளவிலான நடந்த கலை திருவிழா, கடந்த வாரம் முடிந்தது. இதில் தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்கள், அடுத்த கட்டமாக வட்டார அளவிலான போட்டிகளில் பங்கேற்க தயாராக உள்ளனர்.

இந்நிலையில், சொரக்காய்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் மாணவர் எம்.ஏ.அய்யப்பன் என்பவர், கலை திருவிழாவில் பெற்ற பயிற்சியின் தொடர்ச்சியாக, தற்போது விநாயகர் சதுர்த்திக்கு, பஞ்சமுக விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்காக, அவரது வீட்டின் மாடியில் களிமண் சேகரித்து, சில நாட்களாக ஓய்வு நேரத்தில் சிலையை உருவாக்கி வருகிறார். மாணவரின் இந்த முயற்சி, கிராமத்தினரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.






      Dinamalar
      Follow us