/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எரியாத உயர்கோபுர மின்விளக்கு விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
எரியாத உயர்கோபுர மின்விளக்கு விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
எரியாத உயர்கோபுர மின்விளக்கு விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
எரியாத உயர்கோபுர மின்விளக்கு விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : ஏப் 14, 2024 01:29 AM
திருவாலங்காடு:சென்னை - -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் அடுத்து அமைந்துள்ளது புதூர் கிராமம். இந்த சாலை வழியாக திருப்பதி - திருத்தணி திருவள்ளூர் - வேலூர் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு 50,000த்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
புதுாரை சுற்றியுள்ள எல்லப்பநாயுடு பேட்டை, குன்னவளம் குப்பத்துப்பாளையம் காந்தி கிராமம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமத்திற்கு செல்வோர் இந்த புதுார் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சென்று வருகின்றனர்.
இரவு 11:00 மணி வரை குறைந்தது 30 பயணியராவது இங்கு இறங்கி மேற்கண்ட கிராமங்களுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் இருளில் பெண்கள் பேருந்துக்கு காத்திருக்க அச்சமாக உள்ளது. மேலும் நான்கு மாதங்களாக இரவில் மின்விளக்கு எரியாததால், அப்பகுதி கும்மிருட்டாக காணப்படுகிறது.
இதனால், நெடுஞ்சாலையில் வரும் வாகன ஓட்டிகளுக்கு சாலையை கடக்க நிற்கும் இருசக்கர வாகனங்கள் தெரியாமல் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
இந்த பகுதியில் எரியாமல் உள்ள உயர்மின் கோபுர மின்விளக்கை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வாகன ஓட்டிகள் மத்தியில் எழுந்துள்ளது.

