/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சுந்தரராஜ பெருமாள் கோவிலில் வரும் 6ம் தேதி கொடியேற்றம்
/
சுந்தரராஜ பெருமாள் கோவிலில் வரும் 6ம் தேதி கொடியேற்றம்
சுந்தரராஜ பெருமாள் கோவிலில் வரும் 6ம் தேதி கொடியேற்றம்
சுந்தரராஜ பெருமாள் கோவிலில் வரும் 6ம் தேதி கொடியேற்றம்
ADDED : ஏப் 29, 2024 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை பிராமணர் தெருவில் அமைந்துள்ள சுந்தரவல்லி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவம், வரும் 6ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
வரும் 6ம் தேதி காலை 5:30 மணிக்கு கொடியேற்றமும், இரவு 7:00 மணிக்கு அம்ச வாகனத்தில், உற்சவர் பெருமாள் வீதியுலா எழுந்தருளுகிறார். வரும் 11ம் தேதி கருட வாகனத்திலும், 13ம் தேதி தேரிலும் எழுந்தருளுகிறார்.
வரும் 14ம் தேதி காலை 8:00 மணிக்கு ஸ்தபன திருமஞ்சனம், காலை 10:00 மணிக்கு சக்கர ஸ்தானம், மாலை 5:00 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவு 7:00 மணிக்கு உற்சவர் புறப்பாடு நடைபெறும்.

