sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தேசிய ரோல்பால் சாம்பியன்ஷிப் சப் - ஜூனியரில் செங்கை 2ம் இடம்

/

தேசிய ரோல்பால் சாம்பியன்ஷிப் சப் - ஜூனியரில் செங்கை 2ம் இடம்

தேசிய ரோல்பால் சாம்பியன்ஷிப் சப் - ஜூனியரில் செங்கை 2ம் இடம்

தேசிய ரோல்பால் சாம்பியன்ஷிப் சப் - ஜூனியரில் செங்கை 2ம் இடம்


ADDED : ஜூலை 30, 2024 06:48 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 06:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோல்பால் சங்கம் மற்றும் திருச்சி ரோல்பால் சங்கம் சார்பில், 11வது தேசிய சப் - ஜூனியர் ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி, திருச்சியில், 26ம் தேதி துவங்கியது.

நேற்று முன்தினம் இரவு நிறைவடைந்தது. எஸ்.டி.ஏ.டி., - 'பிட்' இந்தியா உள்ளிட்ட அமைப்புகளின் ஆதரவில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், சென்னை, செங்கல்பட்டு உட்பட ஆண்களில் 30 மாவட்ட அணிகளும், பெண்களில் 10 மாவட்ட அணிகளும் பங்கேற்றன.

முதல் நாள் போட்டியை, தென்னிந்திய ரோல்பால் சங்க பொதுச்செயலர் சுப்ரமணியம், ஸ்போர்ட்ஸ் ரோல்பால் சங்க தலைவர் செல்லமுத்து, செயலர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் துவங்கி வைத்தனர்.

இந்திய ரோல்பால் சங்கத்தின் நிர்வாகி நிலேஷ் பாபா ஷிண்டே உடனிருந்தார்.

அனைத்து போட்டிகள் முடிவில், ஆண்களில் கோவை முதலிடத்தையும், செங்கல்பட்டு இரண்டாம் இடத்தையும், திண்டுக்கல் மற்றும் கடலுார் அணிகள் மூன்றாம் இடத்தையும் பகிர்ந்து கொண்டன.

பெண்களிலும் கோவை அணி முதலிடத்தை கைப்பற்றியது. இரண்டாம் இடத்தை திண்டுக்கல், மூன்றாம் இடத்தை திருச்சி மற்றும் கரூர் கைப்பற்றின.






      Dinamalar
      Follow us