sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

 பொருநை அருங்காட்சியகத்தில் முதல் நாளில் குவிந்த மக்கள்

/

 பொருநை அருங்காட்சியகத்தில் முதல் நாளில் குவிந்த மக்கள்

 பொருநை அருங்காட்சியகத்தில் முதல் நாளில் குவிந்த மக்கள்

 பொருநை அருங்காட்சியகத்தில் முதல் நாளில் குவிந்த மக்கள்

1


ADDED : டிச 24, 2025 06:46 AM

Google News

ADDED : டிச 24, 2025 06:46 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலி பொருநை அருங்காட்சியகம் செயல்பட துவங்கிய முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டனர்.

திருநெல்வேலி, தாமிரபரணி ஆற்றின் கறைகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் சின்னங் களை கொண்ட பொருநை அருங்காட்சியகம், நேற்று முதல் மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் நான்கு முக்கிய அரங்குகளாக அமைக்கப்பட்டுள்ளது. அறிமுக கூடத்தில், 17 நிமிட திரைக்காட்சி மூலம் அருங்காட்சியகத்தின் சிறப்பம்சங்கள் விளக்கப்படுகின்றன.

சிவகளை அரங்கில், இரும்பு பயன்பாடு, உருக்கும் தொழில்நுட்பம், டிஜிட்டல் போர்டு மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆதிச்சநல்லுார் அரங்கில், பண்டைய தமிழர்களின் வாழ்வியல், பயன்பாட்டு பொருட்கள் தத்ரூபமாக இடம் பெற்றுள்ளன. கொற்கை அரங்கில், பாண்டியர் கால கடல்சார் வணிகம், ரோமாபுரி தொடர்பு, முத்துக் குளித்தல் விவரிக்கப்படுகிறது. துலுக்கர்பட்டி அரங்கில், தமிழ் பிராமி உள்ளிட்ட எழுத்துகள் கொண்ட தொன்மை ஓடுகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன

மேலும், பொருநை ஆற்றின் தொன்மை குறித்த, 7டி தியேட்டரில், 15 நிமிடங்கள் நடக்கும் காட்சியும், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஐந்திணைகள் குறித்த 5டி தியேட்டரிலும் மக்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.

திருநெல்வேலி ஜங்ஷனில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை என, 11 பஸ்கள் இயக்கப்படுகின்றன. குடிநீர், கழிப்பறை, பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு, 20 ரூபாய். பள்ளி மாணவர்களுக்கு, 10 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us