ADDED : அக் 20, 2025 11:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே வடக்கன்குளத்தை சேர்ந்தவர் ஜோசப் 65. முடிதிருத்தும் கடை நடத்தி வருகிறார்.
இவரது பேத்தி வர்ஷா 14. பள்ளியில் 9ம் வகுப்பு பயில்கிறார். நேற்று மதியம் ஜோசப், வர்ஷாவுடன் டூவீலரில் பழவூர் வழியாக சென்றார். அப்போது திருநெல்வேலி-கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் டூவீலர் மீது கார் மோதியது. ஜோசப்பும், வர்ஷாவும் தூக்கி வீசப்பட்டனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் உயிரிழந்தனர்.