sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 குச்சனுாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க அரசிற்கு கோரிக்கை

/

 குச்சனுாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க அரசிற்கு கோரிக்கை

 குச்சனுாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க அரசிற்கு கோரிக்கை

 குச்சனுாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க அரசிற்கு கோரிக்கை


ADDED : டிச 13, 2025 05:36 AM

Google News

ADDED : டிச 13, 2025 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தமபாளையம்: கோயில் நகரான குச்சனூரில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த சிறப்பு அந்தஸ்து வழங்கி வசதிகள் செய்திட வேண்டும் என பக்தர்கள் கோரியுள்ளனர்.

குச்சனூரில் பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. சுயம்புவாக சனீஸ்வரபகவான் எழுந்தருளியுள்ள தலமாகும். சனீஸ்வர பகவானுக்கென்று தனிக் கோயில் இங்கு மட்டுமே உள்ளது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையில் பக்தர்கள் அதிகம் கூடுகின்றனர். ஆடி சனிக்கிழமைகளில் ஆடிப் பெருந் திருவிழா விமர்ச்சையாக நடைபெறும். லட்சக்கணக்கில் பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்தும், மாநிலங்களில் இங்கு வருவார்கள். ஆடிப் பெருந் திருவிழாவில் சனீஸ்வர பகவான் - நீலாதேவி திருக்கல்யாணம் முக்கிய நிகழ்வாகும். ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திருக்கல்யாணத்தை தரிசிக்க திரள்வார்கள். மூன்றாவது சனிக்கிழமை பெருந் திருவிழாவாக கொண்டாடப்படும்.

அடிப்படை வசதி இன்றி அவதி சிறப்பு பெற்ற குச்சனுாரில் பக்தர்களுக்கு அடிப்படை வசதி இல்லாதது பெரும் குறையாகும். சுரபி நதியில் நீராடி, கரையில் உள்ள விநாயகரை தரிசித்து பின் சனீஸ்வரரை தரிசிப்பார்கள். அந்த சுரபி நதி மாசுபட்டுள்ளது. பக்தர்கள் குளித்து விட்டு, விட்டுச் செல்லும் உடைகள், கழிவுப் பொருட்கள் தண்ணீரில் மிதக்கும். கரையோரத்தில் மொட்டை போடுவது, காக்கை வாகனம் வைப்பது, விளக்கு ஏற்ற என போதிய வசதிகள் இல்லை.

பெண் பக்தர்கள் குளித்து விட்டு உடை மாற்ற தனி அறைகள் இல்லை. பெண் பக்தர்களுக்கு போதிய கழிப்பறை, குடிநீர் வசதிகள் இல்லை. தரிசனம் முடிப்பதற்கு முன்னும், தரிசனம் முடிந்த பின்னும் பல சிரமங்களை வெளியூர் பக்தர்கள் சந்திக்க வேண்டி உள்ளது.

கோயில் வளாகத்திலிருந்து இருந்து சுரபி நதிக்கரையை அடைய அமைக்கப்பட்ட பாலம் சேதமடைந்துள்ளது. வருவாயை அனுபவிக்கும் ஹிந்து சமய அறநிலைய துறை அல்லது பேரூராட்சி நிர்வாகம் வசதிகள் செய்து தர முன் வர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us