ADDED : மார் 14, 2024 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தென்காசி மாவட்ட ஐ.பி.எல்., செஸ் அகடாமி சார்பில் மாநில அளவிலான செஸ் போட்டி நடந்தது.
இதில் தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகடாமி மாணவர்கள் பங்கேற்றனர். 8 வயது பிரிவில் தியாஸ்ரீ,செல்வநிரன்ஜன் 2 ம் இடமும், சர்வேஸ்வரர் 3ம் இடம் பெற்றனர். 9 வயது பிரிவில் இஷான் 2வது இடம் பெற்றார். 10 வயது பிரிவில் ஜெய்ஷர்சினி 2ம் இடம் பெற்றார். மூன்று பிரிவுகளிலும் அடுத்தடுத்த இடங்களை தேனி மாணவர்கள் பெற்றனர். மாணவர்களை அகடாமி தலைவர் சையது மைதீன், செயலர் மாடசாமி, பொருளாளர் கணேஷ் மற்றும் நிர்வாகிகள் பாராட்டினர்.

