sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பென்னிகுவிக் 113வது நினைவு தினம் நாளை மணிமண்டபத்தில் அனுசரிப்பு

/

பென்னிகுவிக் 113வது நினைவு தினம் நாளை மணிமண்டபத்தில் அனுசரிப்பு

பென்னிகுவிக் 113வது நினைவு தினம் நாளை மணிமண்டபத்தில் அனுசரிப்பு

பென்னிகுவிக் 113வது நினைவு தினம் நாளை மணிமண்டபத்தில் அனுசரிப்பு


ADDED : மார் 08, 2024 01:26 AM

Google News

ADDED : மார் 08, 2024 01:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக்கின் 113 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாளை (மார்ச் 9) லோயர்கேம்ப் மணிமண்டபத்தில் விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்த உள்ளனர்.

தமிழகத்திற்கு நீர் ஆதாரமாக உள்ள முல்லைப் பெரியாறு அணையை ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுவிக் பல்வேறு இடையூறுக்கு இடையே 1895ல் கட்டி முடித்தார்.

அணையில் உள்ள நீரை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்தி வருகின்றனர். வறட்சியின் பிடியிலிருந்து தமிழகத்தை அணையைக் கட்டிக் காப்பாற்றிய இவரை தமிழக மக்கள் கடவுளாக நினைத்து வணங்கி வருகின்றனர்.

இவர் 1911 மார்ச் 9ல் இறந்தார். இவரது கல்லறை இங்கிலாந்தில் கேம்பர்லி நகரில் உள்ள பழமையான செயின்ட் பீட்டர்ஸ் சர்ச்சில் உள்ளது.

இவரின் 113 வது நினைவு தினம் நாளை (மார்ச் 9) அனுசரிக்கப்பட உள்ள நிலையில் லோயர்கேம்ப் மணிமண்டபத்தில் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி விவசாயிகள் அஞ்சலி செலுத்த உள்ளனர். அரசு சார்பில் நீர்வளத்துறை அதிகாரிகள் மாலை அணிவிக்க உள்ளனர்.






      Dinamalar
      Follow us