sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தேனி லோக்சபா தேர்தலுக்கு இன்று வேட்பு மனுத்தாக்கல்; வேட்பாளருடன் 4 பேருக்கு மட்டும் அனுமதி

/

தேனி லோக்சபா தேர்தலுக்கு இன்று வேட்பு மனுத்தாக்கல்; வேட்பாளருடன் 4 பேருக்கு மட்டும் அனுமதி

தேனி லோக்சபா தேர்தலுக்கு இன்று வேட்பு மனுத்தாக்கல்; வேட்பாளருடன் 4 பேருக்கு மட்டும் அனுமதி

தேனி லோக்சபா தேர்தலுக்கு இன்று வேட்பு மனுத்தாக்கல்; வேட்பாளருடன் 4 பேருக்கு மட்டும் அனுமதி


ADDED : மார் 20, 2024 12:22 AM

Google News

ADDED : மார் 20, 2024 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : தேனி கலெக்டர் அலுவலகம் வேட்புமனு தாக்கலுக்கு தயார் நிலையில் உள்ளது.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்., 19ல் நடக்கிறது. இதற்காக வேட்பு மனுத்தாக்கல் இன்று துவங்குகிறது. தேனி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் அறையில் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக கலால் உதவி ஆணையர் அலுவலகத்தில் செயல்படும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அறையிலும் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மனுத்தாக்கலை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 100 மீ., துாரம் தடை செய்யப்பட்ட பகுதியாக அடையாளப்படுத்தி உள்ளனர். மனுத்தாக்கல் செய்யும் வேட்பாளர், ஆதரவாளர்களின் 3 வாகனங்கள் மட்டும் கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படும். கார் பதிவெண்கள், வேட்பாளருடன் செல்லும் நபர்கள் பற்றிய விவரங்கள் அலுவலக நுழைவாயிலில் பதிவு செய்து செல்ல வேண்டும்.

அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்ய வேட்பாளருடன் 4 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர்.வேட்பாளருடன் வரும் கார்கள் வேட்பாளரின் செலவு கணக்குகளில் சேர்க்கப்பட உள்ளன. கலெக்டர் அலுவலக தெற்கு நுழைவாயிலில் உள்ள இரு கேட்டுகளில் ஒன்றை மூடி வைக்கப்படுகிறது.

ஒரு கேட் வழியாக வந்து செல்ல அனுமதிக்கப்படும். கலெக்டர் அலுவலக வடக்கு பகுதி நுழைவு வாயில் வேட்பு மனுத்தாக்கல் முடியும் வரை மூடப்படுகிறது.






      Dinamalar
      Follow us