sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 காணாமல் போன  சிறுவன்: பேரிடர் மீட்பு படை தேடல்

/

 காணாமல் போன  சிறுவன்: பேரிடர் மீட்பு படை தேடல்

 காணாமல் போன  சிறுவன்: பேரிடர் மீட்பு படை தேடல்

 காணாமல் போன  சிறுவன்: பேரிடர் மீட்பு படை தேடல்


ADDED : டிச 24, 2025 06:01 AM

Google News

ADDED : டிச 24, 2025 06:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனியில் கடந்த நவ.30ல் முல்லைப் பெரியாற்று வெள்ளத்தில் காணாமல் போன சிறுவன் அர்ஜூன் 14, என்பவரை 25 நாட்களுக்கு பின் நேற்று பேரிடர் மீட்பு படையினர் தேடுதலில் ஈடுபட்டனர்.

தேனி சுப்பன் தெரு அழகர்சாமி மகன் அர்ஜூன். இவர் முல்லைப் பெரியாற்றில் நவ. 30ல் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி காணாமல் போனார்.

போலீசார், தீயணைப்புத்துறையினர் தேடியும் கிடைக்கவில்லை.

பெற்றோர் கோரிக்கையை ஏற்று, எஸ்.பி., சினேஹா பிரியா, கலெக்டர் ரஞ்ஜித் சிங் பரிந்துரையில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் நேற்று சுப்பன்தெரு முல்லை பெரியாற்று பகுதியில் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

தேனி இன்ஸ்பெக்டர்கள் ராமலட்சுமி, ஜவஹர்முன்னிலையில், துணைத் தளபதி டாக்டர் கோவிந்த், படையின் குழு கட்டளை ஆணையர் அர்ஜூன்பால் தலைமையிலான 30 படை வீரர்கள் ஈடுபட்டனர்.

தேடுவதற்கு உதவிடும் வகையில் 400 கன அடி நீர் பெரியாறு அணையில் குறைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us