sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஜம்புலிப்புத்துார் கோயில் தெப்பத்தில் கழிவு கலப்பதால் புனித நீர் பாதிப்பு

/

ஜம்புலிப்புத்துார் கோயில் தெப்பத்தில் கழிவு கலப்பதால் புனித நீர் பாதிப்பு

ஜம்புலிப்புத்துார் கோயில் தெப்பத்தில் கழிவு கலப்பதால் புனித நீர் பாதிப்பு

ஜம்புலிப்புத்துார் கோயில் தெப்பத்தில் கழிவு கலப்பதால் புனித நீர் பாதிப்பு


ADDED : டிச 11, 2024 06:05 AM

Google News

ADDED : டிச 11, 2024 06:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: ஜம்புலிபுத்தூர் கதலிநரசிங்கப்பெருமாள் கோயில் தெப்பத்தில் கழிவு நீர் கலப்பதால் தேங்கும் நீருக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் 800 ஆண்டுகள் பழமையானது. ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடக்கும் சித்திரை திருவிழாவில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுப்பர். இந்த ஆண்டு துவக்கத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் கோயிலில் புனரமைப்பு பணிகள் செய்து ஜூலை 12ல் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் முன்புறம் உள்ள தெப்பக்குளம் உபயதாரர் மூலம் ரூபாய் பல லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டு பாதுகாப்பு வேலியும் அமைக்கப்பட்டது. கோயில் வளாகத்தில் இருந்து வெளியேறும் நீர் குழாய் மூலம் தெப்பத்தில் தேக்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களில் பெய்த மழையில் தற்போது தெப்பத்தில் பாதி அளவுக்கு மேல் மழை நீர் தேங்கியுள்ளது. தேங்கிய மழை நீருடன் ஜம்புலிப்புத்தூர் தெருக்களில் இருந்து வரும் கழிவு நீரும் தெப்பத்தில் சேரும் வகையில் மண்வாய்க்கால் அமைத்துள்ளனர். இதனால் கழிவு நீரும் மழை நீருடன் தெப்பத்தில் சேர்ந்து நீரின் தன்மை மாறி உள்ளது. தெப்பத்து நீரில் மிதக்கும் குப்பையும் அகற்றவில்லை. தெப்பக்குளத்தில் தேங்கும் நீரை புனித நீராக பக்தர்கள் தலையில் தெளித்து வந்தனர். தற்போது கழிவுநீர் கலந்துள்ளதால் அதில் வளரும் மீன்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தெப்பத்தில் சேரும் கழிவுநீரை தடுக்க ஹிந்து அறநிலையத்துறை, ரெங்கசமுத்திரம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us