/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மணல் கடத்தலில் பறிமுதல் செய்த வாகனங்களை ஏலம் விட வலியுறுத்தல்
/
மணல் கடத்தலில் பறிமுதல் செய்த வாகனங்களை ஏலம் விட வலியுறுத்தல்
மணல் கடத்தலில் பறிமுதல் செய்த வாகனங்களை ஏலம் விட வலியுறுத்தல்
மணல் கடத்தலில் பறிமுதல் செய்த வாகனங்களை ஏலம் விட வலியுறுத்தல்
ADDED : ஏப் 26, 2024 01:09 AM

போடி : போடி பகுதியில் மணல்,மண் கடத்தலுக்கு பயன்படுத்திய டூவீலர்களை வருவாய் துறையினர் பறிமுதல் செய்த டூவீலர்கள் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக தாலுகா அலுவலகத்தில் காட்சி பொருளாக உள்ளது.
போடி கொட்டகுடி, அணைப்பிள்ளையார் அணை ஆற்றுப் பகுதியில் ஆறு ஆண்டுகளுக்கு முன் அதிகாரிகளின் ஆசியுடன் இரவு, பகலாக மணல் கடத்தல் நடந்து வந்தது. இதனால் அணைப்பகுதியில் அரிப்பு ஏற்பட்டு இடிந்து விழும் நிலை ஏற்பட்டது. இதனையொட்டி அணைப்பிள்ளையார் அணைப்பகுதியில் மணல் அள்ள மதுரை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் மாட்டு வண்டி, டிராக்டரில் மணல் அள்ளி கடத்தல் ஓரளவிற்கு நிறுத்தப்பட்டன.
இதற்கு பதிலாக பிளாஸ்டிக் பைகளில் மணல் அள்ளி டூவீலர்களிலும், நம்பர் இல்லாத டூவீலர் மூலம் கடத்தி வந்தனர். அதிகாரிகள் வருவதை அறிந்தால் 'எஸ்கேப்' ஆவதற்கு டூவீலரை பயன்படுத்தி வந்தனர். பலர் வாகனங்களை போட்டு விட்டு தப்பினர். இது போன்ற செயல்களால் மணல் கடத்திய 50 க்கும் மேற்பட்டோர் டூவீலர்களை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து தாலுாகா அலுவலக வளாகத்தில் வைத்துள்ளனர். டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டு 6 ஆண்டுகளுக்கு மேலாகியும் உரியவரிடம் அபராதம் வசூலித்து ஒப்படைக்காமலும், ஏலம் விடப்படாமல் இருப்பதாலும் பயன்பாடு இன்றி துருப்பிடித்து வீணாகிறது. அரசுக்கு வருமானம் கிடைக்கும் வகையில் பறிமுதல் செய்யப்பட்ட டூவீலர்களை ஏலம் விட வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

