/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு லோயர்கேம்பில் மின் உற்பத்தி துவங்கியது -தேர்தல் நேரத்தில் மின்தடை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை
/
பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு லோயர்கேம்பில் மின் உற்பத்தி துவங்கியது -தேர்தல் நேரத்தில் மின்தடை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை
பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு லோயர்கேம்பில் மின் உற்பத்தி துவங்கியது -தேர்தல் நேரத்தில் மின்தடை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை
பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு லோயர்கேம்பில் மின் உற்பத்தி துவங்கியது -தேர்தல் நேரத்தில் மின்தடை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை
ADDED : மார் 23, 2024 01:59 AM
கூடலுார்:முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு நீர் திறப்பு வினாடிக்கு 700 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் லோயர்கேம்ப் மின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் துவங்கியது.
முல்லைப் பெரியாறு அணையில் மார்ச் 17ல் தமிழகப் பகுதிக்கு 711 கன அடியாக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் 105 கன அடியாக குறைக்கப்பட்டது. இரண்டாம் போக நெல் சாகுபடி முடிவுக்கு வந்ததாலும், அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. நீர் திறப்பு குறைத்ததால் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
நேற்று காலை மீண்டும் நீர் திறப்பு 700 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் மின்நிலையத்தில் மின்உற்பத்தி மீண்டும் 63 மெகாவாட்டாக அதிகரிக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 118.10 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). நீர் இருப்பு 2285 மில்லியன் கன அடியாகும். அணைக்கு நீர்வரத்து இல்லை. நீர்ப் பிடிப்பில் கடுமையான வெப்பம் நிலவுகிறது.
தேர்தல் நேரத்தில் மின்தடை ஏற்படாமல் இருப்பதை தவிர்க்க அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு லோயர்கேம்ப் மின் நிலையத்தில் மின் உற்பத்தி துவக்கப்பட்டது என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
குடிநீர் பற்றாக்குறை அபாயம்
மின்தடை ஏற்படாமல்இருக்க அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் வெகுவாக குறையும். இதனால் கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்கு ஜூனில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். மேலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயமும் உள்ளது.

