/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தி.மு.க., -ஓ.பி.எஸ்., அணி நிர்வாகிகள் மீது வழக்கு
/
தி.மு.க., -ஓ.பி.எஸ்., அணி நிர்வாகிகள் மீது வழக்கு
ADDED : மார் 27, 2024 12:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி பங்காரு தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் 68. தி.மு.க., கிளை செயலாளர்.
இவர் ஸ்டாலின், உதயநிதி படத்துடன் கூடிய பலகையை வீட்டு முன்பாக வைத்து தேர்தல் விதிகளை மீறி உள்ளார். இது போல இதே பகுதியை சேர்ந்தவர் சரவண நிதி 38. ஓ.பி.எஸ்., அணி நிர்வாகி.
இவர் வீட்டு முன்பாக கொடி கம்பத்தை ஊன்றி தேர்தல் நடத்தை விதிகளை மீறி உள்ளார். போடி சட்டசபை தொகுதி பறக்கும் படை தலைமை அலுவலர் ராமகிருஷ்ணன் புகாரில் ஜெயராஜ், சரவண நிதி மீது போடி டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

