/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
திருமலை ராயப் பெருமாள் கோயில் தேர் நிலைக்கு வந்தது
/
திருமலை ராயப் பெருமாள் கோயில் தேர் நிலைக்கு வந்தது
திருமலை ராயப் பெருமாள் கோயில் தேர் நிலைக்கு வந்தது
திருமலை ராயப் பெருமாள் கோயில் தேர் நிலைக்கு வந்தது
ADDED : மே 25, 2024 04:54 AM
உத்தமபாளையம், : கோம்பை திருமலை ராயப் பெருமாள் கோயில் தேரோட்டம் நேற்று முன்தினம் துவங்கி நேற்று மாலை தேர் நிலை நிறுத்தப்பட்டது.
கோம்பை திருமலை ராயப் பெருமாள் கோயில் வைகாசி விசாக தேரோட்ட நிகழ்ச்சிகள் மே 12 ல் துவங்கியது. ஜுன் 5 ம் தேதி வரை நடைபெறுகிறது. தேரோட்டம் நேற்று முன்தினம் மாலை 4:10 மணிக்கு துவங்கி, மெயின்ரோட்டில் உள்ள பெருமாள் கோயில் அருகில் மாலை 5:45 மணிக்கு நிறுத்தப்பட்டது. பின் நேற்று மதியம் 2:30 மணிக்கு துவங்கிய தேரோட்டம் மேற்கு ரத வீதியிலிருந்து வடக்கு ரத வீதி வழியாக சென்று, கிழக்கு ரத வீதியில் மாலை 4:40 மணிக்கு நிலையில் நிறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பரம்பரை அறங்காவலர் சீனிவாசராயர், எம்.எஸ்.ஏ. ராமகிருஷ்ணன், செயல் அலுவலர் அருணா தேவி உள்ளிட்ட அனைத்து சமூக தலைவர்களும் பங்கேற்றனர். தொடர்ந்து மண்டகப்படி நிகழ்ச்சிகள் ஜுன் 5 வரை நடைபெறுகிறது.

