/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
புறவழிச்சாலை சந்திப்பில் லாரி - டூவீலர் மோதல் 2 பேர் காயம்
/
புறவழிச்சாலை சந்திப்பில் லாரி - டூவீலர் மோதல் 2 பேர் காயம்
புறவழிச்சாலை சந்திப்பில் லாரி - டூவீலர் மோதல் 2 பேர் காயம்
புறவழிச்சாலை சந்திப்பில் லாரி - டூவீலர் மோதல் 2 பேர் காயம்
ADDED : டிச 17, 2025 05:30 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலை காரைக்குடி ரோடு சந்திப்பில் லாரி - டூவீலர் மோதலில் 2 வாலிபர்கள் காயமடைந்தனர்.
திருமயம்- மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் தம்பிபட்டி பகுதியில் காரைக்குடி ரோடு சந்திக்கிறது. அப்பகுதியில் நேற்று காலை காரைக்குடியில் இருந்து திருப்புத்துார் வந்த சரக்கு லாரி கடந்த போது, திருச்சியிலிருந்து திருச்சுழிக்கு டூவீலரில் சென்ற டூ வீலரும் மோதியது. டூ வீலரில் வந்த இரு வாலிபர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் விருதுநகர், திருச்சுழி, நத்தக்குளத்தைச் சேர்ந்த பெரியண்ணன் மகன் சரவணமுருகன், முத்துவழிவிட்டான் மகன் விக்னேஷ் என தெரியவந்தது.
சரவண முருகனின் வலது கால் லாரி சக்கரத்தில் சிக்கி கொண்டது. அருகிலிருந்தவர்கள் ஜாக்கியை வைத்து சரவண முருகனை மீட்டனர்.
திருப்புத்துார் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்கு பின் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
திருச்சியில் சரவணமுருகனுக்கு ராணுவத்தில் சேர பணி நியமன ஆணை பெற்று திரும்புகையில் இந்த விபத்து நடந்துள்ளது. இன்ஸ்பெக்டர் பிராவின்டானி, எஸ்.ஐ.ரவி விசாரிக்கின்றனர்.

