/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தாயமங்கலத்தில் இன்று பங்குனி பொங்கல்
/
தாயமங்கலத்தில் இன்று பங்குனி பொங்கல்
ADDED : ஏப் 05, 2025 05:47 AM

இளையான்குடி: தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் இன்று பங்குனிபொங்கல் விழா நடைபெறுவதை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்களை செலுத்த குவிந்து வருகின்றனர்.
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா மார்ச் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மன் சிம்மம், யானை, கிளி, அன்னம் வாகனங்களில் அலங்காரத்துடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
பங்குனி மாதம் பிறந்ததிலிருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தீச்சட்டிகள், ஆயிரம்கண் பானை, கரும்பாலை தொட்டில், அங்கப்பிரதட்சணம் உள்ளிட்ட பல்வேறு நேர்த்தி செலுத்தி பொங்கல் வைத்து ஆடு, கோழிகளை பலியிட்டு அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.
நேற்று முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கோயிலில் பொங்கல் வைத்து நேர்த்திக் கடன்களை செலுத்தி 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.
நாளை 6ம் தேதி இரவு 7:20 மணிக்கு மின் அலங்கார தேர் பவனியும், 7ம் தேதி பால்குடம், ஊஞ்சல் உற்சவம், பூப்பல்லாக்கு நிகழ்ச்சிகள் நடைபெறும். ஏப்., 8ம் தேதி திருக்கோயில் தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

