நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சிவகங்கை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருசாமி தலைமையில் இன்று பயனீட்டாளர்கள் குறை தீர் கூட்டம் நடக்கிறது.
காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை உதவி செயற்பொறியாளர்/ பகிர்மானம்/ சிங்கம்புணரி அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் மின் பயனீட்டாளர்கள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

