sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 அனுமதி இல்லாத போர்டு அகற்ற கலெக்டர் உத்தரவு

/

 அனுமதி இல்லாத போர்டு அகற்ற கலெக்டர் உத்தரவு

 அனுமதி இல்லாத போர்டு அகற்ற கலெக்டர் உத்தரவு

 அனுமதி இல்லாத போர்டு அகற்ற கலெக்டர் உத்தரவு


ADDED : டிச 13, 2025 05:24 AM

Google News

ADDED : டிச 13, 2025 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையான்குடி: சிவகங்கை மாவட்டத்தில் அனுமதி இன்றி வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டு, விளம்பரப் பலகை, தற்காலிக வளைவுகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இளையான்குடி அருகே உள்ள வடக்கு சாலை கிராமத்தைச் சேர்ந்த பாண்டி மகன் ராதாகிருஷ்ணன் என்பவர் அரசியல் கட்சி மற்றும் சமுதாய அமைப்பினர்களால் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டு, பதாகை, பலகை மற்றும் தற்காலிக வளைவுகளை அகற்ற வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளையில் 2022-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

நீதிபதிகள் வரும் டிச.15ம் தேதிக்குள் மேற்கண்டவற்றை உரிய போலீஸ் பாதுகாப்புடன் அகற்றி அதற்கான அறிக்கையை புகைப்படத்துடன் ஐகோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டுமென உத்தரவிட்டனர்.

இதனை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட நிர்வாகம் அரசியல் கட்சியினர் மற்றும் சமுதாய அமைப்பினர் உரிய அனுமதி இன்றி வைத்துள்ள பிளக்ஸ், பதாகைகள், பலகைகள் மற்றும் தற்காலிக வளைவுகளை உடனடியாக அகற்றி சிவகங்கை கோட்டாட்சியர், கோட்ட பொறியாளர், நெடுஞ்சாலை துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சி உதவி இயக்குனர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் புகைப்படத்துடன் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென உத்தர விட்டுள்ளது.






      Dinamalar
      Follow us