/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் சித்திரை திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்
/
மானாமதுரையில் சித்திரை திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்
மானாமதுரையில் சித்திரை திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்
மானாமதுரையில் சித்திரை திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED : ஏப் 12, 2024 10:43 PM

மானாமதுரை : மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயில் சித்திரை திருவிழா நாளை (ஏப்.14ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர்கோயிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.
விழா நாட்களின் போது சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும்.கோவில் முன் வைகை ஆற்றில் தினந்தோறும் கலை நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த வருடத்திற்கான சித்திரை திருவிழா நாளை ஏப்.14ம் தேதி காலை 10:00-10:30மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.
முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஏப்.21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணியிலிருந்து 10:30 மணிக்குள்ளும், ஏப்ரல் 22ம் தேதி திங்கட்கிழமை காலை 10:00 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது.
விழா ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சீனிவாசன், பரம்பரை ஸ்தானீகர் சோமசுந்தரம் செய்து வருகின்றனர்.

