sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

நாட்டரசன்கோட்டை வைகாசி விழா தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

/

நாட்டரசன்கோட்டை வைகாசி விழா தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

நாட்டரசன்கோட்டை வைகாசி விழா தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

நாட்டரசன்கோட்டை வைகாசி விழா தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு


ADDED : மே 23, 2024 03:14 AM

Google News

ADDED : மே 23, 2024 03:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது.

சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில், மே 14 அன்று கொடியேற்றத்துடன் வைகாசி விசாக திருவிழா தொடங்கியது. தினமும் அம்மன் காலையில் வெள்ளி கேடயம், இரவில் சிம்மம், காமதேனு, யானை, பூதம், ரிஷபம், அன்ன வாகனங்களில் வீதி உலா வந்தார். விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட தேரில் கண்ணுடைய நாயகி அம்மன் எழுந்தருளினார்.

சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை செய்தனர். நேற்று காலை 9:57 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, தேரோட்டம் தொடங்கியது.

பெரிய தேருக்கு முன் சப்பரத்தில் விநாயகர் சென்றார். தேர் நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து மீண்டும் காலை 10:55 மணிக்கு நிலையை அடைந்தது.

தேர் புறப்படும் முன் சிதறு தேங்காய் உடைத்தும், கிடா பலியிட்டும் நேர்த்தி செலுத்தினர். தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஓம் சக்தி, பராசக்தி என கோஷமிட்டபடியே வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்களுக்கு உபயதாரர்கள் சார்பில் அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது.இன்று பால்குடம், பூக்குழி

பத்தாம் நாளான இன்று காலை 8:00 மணிக்கு பால்குடம், பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்தி செலுத்துகின்றனர். காலை 9:30 மணிக்கு பூர்ண உற்ஸவமும், இரவு 7:00 மணிக்கு வெள்ளி குதிரை வாகனத்தில் முயல்குத்தி திருநாளும், இரவு 9:00 மணிக்கு புஷ்ப பல்லக்கில் கண்ணுடைய நாயகி எழுந்தருள்வார். ஏற்பாடுகளை தேவஸ்தான கண்காணிப்பாளர் சரவண கணேசன், கவுரவ கண்காணிப்பாளர் முருகப்பன் உட்பட விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us