/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தொழிலாளிக்கு கத்திக்குத்து; நண்பர்களுக்கு வலை
/
தொழிலாளிக்கு கத்திக்குத்து; நண்பர்களுக்கு வலை
ADDED : ஏப் 29, 2024 07:05 AM
பனமரத்துப்பட்டி : கொண்டலாம்பட்டி அருகே தம்மநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகேசன், 32, தாசநாயக்கன்பட்டி சின்னமணி, 28, கொண்டலாம்பட்டி சேகர், 30.
நண்பர்களான இவர்கள், கோபிசெட்டிபாளையம் அருகே புன்செய்புளியம்பட்டியில் உள்ள தனியார் பட்டு தறி தொழிற்சாலையில் பணிபுரிகின்றனர்.நேற்று முன்தினம் அதிகாலை, 2:00 மணிக்கு, 3 பேரும், நாழிக்கல்பட்டி ரெட்டை ஓடை அருகே மது அருந்தினர். போதையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சின்னமணி, சேகர் சேர்ந்து, கத்தியால் முருகேசனின் குரல்வளை, கையில் குத்தி காயம் ஏற்படுத்தினர். அவர்களிடம் இருந்து தப்பிய முருகேசன், 3:10 மணிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மல்லுார் போலீசார், இருவரை தேடி வருகின்றனர்.

