/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போதை பொருளால் மகன் பலியானதாக தாய் புகார் பால் குடித்து இறந்ததாக போலீசார் வழக்குப்பதிவு
/
போதை பொருளால் மகன் பலியானதாக தாய் புகார் பால் குடித்து இறந்ததாக போலீசார் வழக்குப்பதிவு
போதை பொருளால் மகன் பலியானதாக தாய் புகார் பால் குடித்து இறந்ததாக போலீசார் வழக்குப்பதிவு
போதை பொருளால் மகன் பலியானதாக தாய் புகார் பால் குடித்து இறந்ததாக போலீசார் வழக்குப்பதிவு
ADDED : மே 19, 2024 02:32 AM
ஈரோடு: மாணவன் சாவுக்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், தாய் உள்ளிட்ட உறவினர்கள் மனு வழங்கினர்.
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல், காந்தி நகரை சேர்ந்த கூலி தொழிலாளி பழனிசாமி. சில ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். இவரின் மனைவி அம்சா. இவர்களின் மகன் கவுதம், 16; தளவாய்பேட்டையில் உள்ள பள்ளியில் கவுதம், பத்தாம் வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். கடந்த, 10ல் அதே பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுவன், கவுதமை வெளியே அழைத்து சென்றுவிட்டு வீடு திரும்பினர். அன்று முதல் கவுதமுக்கு வயிற்று வலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, பவானி அரசு மருத்துவமனையிலும், பின் சேலம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்ட நிலையில், 16ல் இறந்தார். ஆப்பக்கூடல் போலீசார், 'பால் குடித்து கவுதம் இறந்தார்' என்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு, கவுதமின் தாய் அம்சா தனது உறவினர்களுடன் நேற்று வந்து, புகார் பெட்டியில் மனுவை போட்டு கூறியதாவது: எனது மகன் கவுதமை, அதே ஊரை சேர்ந்த சிறுவன் அழைத்து சென்றார். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்காக பாலில் கஞ்சா, பீடித்துாள், ஹான்ஸ், சொல்யூஷன் என்ற பெயின்டில் கலக்கும் பொருளை கலந்து கொடுத்து குடித்துள்ளார். இது விஷமாகி கவுதம் இறந்துவிட்டார். ஆனால், 'பால் குடித்து கவுதம் இறந்து விட்டார்' என்று ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாலுடன், பல போதை பொருட்களை கலந்து கொடுத்த, மற்றொரு சிறுவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை பொருள் நடமாட்டம் உள்ளதை மறைப்பதற்காக, பால் குடித்து இறந்ததாக வழக்கை பதிவு செய்த போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மை சம்பவத்தை வெளிக் கொண்டு வர வேண்டும். இவ்வாறு கூறினார். அதேசமயம் சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து கவுதமின் உடலை, அவரது குடும்பத்தார் பெறவில்லை.

