sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சாப்பிடாமல் மனு அளிக்க வந்த மக்களுக்கு பணம் வழங்கி சாப்பிட அறிவுறுத்திய அமைச்சர்

/

சாப்பிடாமல் மனு அளிக்க வந்த மக்களுக்கு பணம் வழங்கி சாப்பிட அறிவுறுத்திய அமைச்சர்

சாப்பிடாமல் மனு அளிக்க வந்த மக்களுக்கு பணம் வழங்கி சாப்பிட அறிவுறுத்திய அமைச்சர்

சாப்பிடாமல் மனு அளிக்க வந்த மக்களுக்கு பணம் வழங்கி சாப்பிட அறிவுறுத்திய அமைச்சர்


ADDED : நவ 20, 2024 07:35 AM

Google News

ADDED : நவ 20, 2024 07:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சாப்பிடாமல் மனு அளிக்க வந்த மக்களுக்கு பணம் வழங்கி சாப்பிட்டு செல்ல, அமைச்சர் அறிவுறுத்தினார்.

தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன், சேலம், கோரிமேட்டில் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நேற்று ஆய்வு செய்தார். அப்போது ஏராளமானோர், மனுக்களுடன் காத்திருந்தனர். உடனே அமைச்சர், மனுக்களை வாங்கி படித்தார்.தொடர்ந்து உதவி கமிஷனரை அழைத்து, திருமண உதவி, மாதாந்திர உதவி தொகை உள்ளிட்டவை வழங்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி, அனைத்து மனுக்களுக்கும் ஒரு வாரத்தில் தீர்வு காணும்படி உத்தரவிட்டார்.

பின் ஒரு பெண்ணிடம், 'சாப்டீங்களா' என கேட்க, அவர், 'இல்லை' என கூறினார். உடனே, 500 ரூபாய் எடுத்து பெண்ணிடம் வழங்கினார். தொடர்ந்து மற்றவர்களையும் கேட்க, 'யாரும் சாப்பிடவில்லை' என கூறினர். இதனால் மேலும், 2,000 ரூபாயை உதவியாளரிடம் வாங்கி, மக்களுக்கு வழங்கினார்.பின், 'அனைவரும் சாப்பிட்டு விட்டு செல்லுங்கள். உங்கள் மனுக்களுக்கு உரிய வாரத்தில் தீர்வு காணப்படும்' என கூறி அனுப்பிவைத்தார். இதையடுத்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.






      Dinamalar
      Follow us