ADDED : நவ 30, 2024 02:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகுடஞ்சாவடி: காகாபாளையம் - ஆட்டையாம்பட்டி பிரதான சாலை, கண்டர்குலமாணிக்கம், அருந்ததியர் காலனி அருகில் இருந்து வேப்பமரத்தான்காடு, கோணங்கிபாளையம் வழியே, 2 கி.மீ.,க்கு, 2004ல் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. அதை சரியாக பராமரிக்காததால், 10 ஆண்டுகளாக கரடு முரடாக காட்சியளிக்கி-றது. இதனால் அதிகாலையில் விவசாயிகள், காளிப்பட்டிக்கு விளைபொருட்களை, இருசக்கர வாகனங்களில் கொண்டு செல்லும் போது தடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.
மேலும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், சைக்கிளில் செல்லும்-போது தடுமாறுகின்றனர். சாலையை சீரமைக்க, அதிகாரிகள் நட-வடிக்கை எடுக்க வேண்டும்.

