/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சுகவனேஸ்வரர் கோவிலுக்கு யானை வழங்க கோரிக்கை
/
சுகவனேஸ்வரர் கோவிலுக்கு யானை வழங்க கோரிக்கை
ADDED : ஏப் 23, 2024 03:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் மாவட்ட மதசார்பற்ற ஜனதாதள தலைவர் வேலாயுதம் வெளியிட்ட அறிக்கை:
சேலத்தில், பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவிலில் ராஜேஸ்வரி என்ற யானை இருந்தது. இந்த யானை இறந்து, 6 ஆண்டுகள் ஆகிறது. இதையடுத்து தமிழக அரசுக்கு பல முறை யானை வேண்டி கடிதம் எழுதியும், யானை வழங்கப்படவில்லை. எனவே, போர்க்கால அடிப்படையில் சுகவனேஸ்வரர் கோவிலுக்கு யானை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.

