/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரசு தொடக்கப்பள்ளியில் டிஜிட்டல் வகுப்பறை திறப்பு
/
அரசு தொடக்கப்பள்ளியில் டிஜிட்டல் வகுப்பறை திறப்பு
ADDED : ஜூலை 16, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி, குரால்நத்தம் அரசு தொடக்கப்பள்ளி பழைய ஓட்டு கட்டடத்தில் பள்ளி செயல்பட்டது. இதனால், 'நமக்கு நாமே' திட்டத்தில், 18 லட்சம் ரூபாய் மதிப்பில், ஸ்மார்ட் போர்டு, புரஜெக்டர் உள்ளிட்ட வசதிகளுடன் இரு, 'டிஜிட்டல்' வகுப்பறையாக உருவாக்கப்பட்டது.
நேற்று, தி.மு.க.,வின் சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் தலைமை வகித்து, திறந்து வைத்தார். துணை செயலர் சுரேஷ்குமார், ஒன்றிய செயலர் உமாசங்கர், கல்வியாளர் சந்திரசேகரன், ஒன்றிய கமிஷனர் கார்த்திகேயன், ஆசிரியர் தெய்வநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

