ADDED : ஜன 09, 2026 04:55 AM
இடைப்பாடி: இடைப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசி-ரியராக பணிபுரிந்தவர் செந்தில்குமரவேல், 58. இவர் மீது மாண-வியர் அளித்த பாலியல் புகாரால் போலீசார் விசாரித்து அவரை கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில் அலட்சியமாக இருந்ததாக தலைமை ஆசி-ரியை சீதா, 54, உதவி தலைமை ஆசிரியைகள் ஜெயலட்சுமி, 41, மல்லிகா, 55, உடற்கல்வி ஆசிரியர் விஜி, 46, மீது, 'போக்சோ' வழக்குப்பதிந்தனர். சீதா, கோனேரிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்-ளிக்கு மாற்றப்பட்டார். ஜெயலட்சுமி, கடந்த, 23ல் அதே பள்-ளியில் பொறுப்பேற்றார். மற்றவர்களுக்கு பணியிடம் ஒதுக்கப்ப-டாததால், ஈட்டிய விடுப்பில் உள்ளனர். சீதா, அவர் மீதான புகாரை மீண்டும் விசாரிக்க, பள்ளி கல்வித்துறை உயர் அதிகாரிக-ளிடம் மனு அளித்தார். அதனால் தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா உள்ளிட்ட கல்வித்துறை அதிகா-ரிகள் நேற்று, சீதாவிடம் விசாரித்தனர்.இதுகுறித்து ஜோதி சந்திராவிடம் கேட்டபோது, ''ஏற்கனவே விசாரணை முடிந்தது. அது குறித்த ஆவணங்களை பெற வந்தேன்,'' என்றார்.

