ADDED : ஜன 26, 2026 04:40 AM
சேலம்: நாமக்கல் மாவட்டம், கொசவம்பட்டி சிவகுரு பெரிய வீதியை சேர்ந்தவர் அருள்குமார், 40. இவர் நேற்று முன்தினம் இரவு, சென்னை செல்வதற்காக சேலம் ஜங்ஷன் வந்தார்.
அப்போது புது ரோடு பகுதியில் உள்ள, அரசு டாஸ்மாக் கடை பாரில் மது குடித்து கொண்டிருந்தார். அப்போது அருகில் மது குடித்து கொண்டிருந்த மூவர், அருள்குமாரை மிரட்டி அவரிடம் இருந்து ஏ.டி.எம்.கார்டை பறித்து, 3,000 ரூபாய் எடுத்துக் கொண்டு பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த வெள்ளி செயினை பறித்து கொண்டு, தாக்கி விட்டு தப்பி சென்றனர்.அருள்குமார் கொடுத்த புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசா-ரணை நடத்தியதில், சூரமங்கலம், சோழம்பள்ளம் புது ரோட்டை சேர்ந்த பிரபல ரவுடி புரு ேஷாத்தமன், 30, அந்தோனிபுரம் ஓடையை சேர்ந்த சுகனேஷ், 43, சதீஷ்குமார் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து அருள்குமாரிடம் பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
பிரபல ரவுடிகள் புரு ேஷாத்தமன், சுகனேஷ் ஆகிய இருவ-ரையும் நேற்று கைது செய்த போலீசார், தலைமறைவான சதீஷ்கு-மாரை தேடி வருகின்றனர்.

