/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
16 வயது சிறுமி திருமணம் ; கணவர், தந்தைக்கு காப்பு
/
16 வயது சிறுமி திருமணம் ; கணவர், தந்தைக்கு காப்பு
ADDED : டிச 16, 2025 08:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் மாவட்டம், இடைப்பாடி ராமாகவுண்டனுாரை சேர்ந்தவர் சண்முகம், 32, தொழிலாளி. இவர் சேலத்தில் வசிக்கும் உறவினரான, 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி, கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டார். இந்த தகவல் சைல்ட் லைன் அமைப்பிற்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சைல்ட் லைன் அதிகாரிகள், சிறுமியை மீட்டு காப்பகத்தில் அனுமதித்தனர். தகவல் அறிந்து வந்த டவுன் மகளிர் இன்ஸ்பெக்டர் கலைவாணி தலைமையிலான போலீசார், சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து திருமணம் செய்த சண்முகம், உடந்தையாக இருந்த தந்தை ஆகிய இருவரையும் போலீசார் நேற்று, போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

