/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வானிலை ஆய்வுத்துறை 150வது ஆண்டு விழா
/
வானிலை ஆய்வுத்துறை 150வது ஆண்டு விழா
ADDED : ஜன 14, 2025 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: இந்திய வானிலை ஆய்வுத்துறை, 150வது ஆண்டு நிறுவன நாள், நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
அதையொட்டி, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வானிலை கண்காணிப்பகத்தில் கருத்தரங்கம் நடந்தது. வானிலை அதிகாரி இளங்கோ தலைமை வகித்தார். அதிகாரி மாரிமுத்து வர-வேற்றார். ஓய்வு பெற்ற வானிலை அதிகாரி பாலசுப்ரமணியம், 'பெருங்கலிவானம் ஏர் தரும் பொழுதே' என்ற தலைப்பில் சங்க-காலம் தொடங்கி, தற்போதுவரை வானிலை பயன்பாடு, வானிலை முன்னறிவிப்பு, அவற்றை மக்கள் எப்படி பயன்படுத்தி கொள்ளலாம்
என்பது பற்றி பேசினார்.
மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருள் உள்பட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

