ADDED : நவ 08, 2025 05:16 AM
சேலம்:சேலம்
ரயில்வே தனிப்படை போலீசார், நேற்று காலை, சேலம் வந்த, ஷாலிமார் -
நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி சோதனை செய்தனர். முன்பதிவற்ற
பொதுப்பெட்டி கழிப்பறை அருகே, இரு பை கேட்பாரற்று கிடந்தன.
அதை
போலீசார் திறந்து பார்த்தபோது, 9 கிலோ கஞ்சா இருந்தது. அதை
கைப்பற்றி, சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசில்
ஒப்படைக்கப்பட்டது. அவர்கள், ரயிலில் கஞ்சா கடத்தி வந்தவர்கள் யார்
என விசாரிக்கின்றனர்.
2 கிலோ
ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு நேற்று
முன்தினம் இரவு, 'டாடா நகர் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ்' ரயில் வந்தது.
மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சோதனையில், பொது பெட்டியில்
கிடந்த ஒரு பையை எடுத்து சோதித்தனர். அதில், 2 கிலோ எடையில் கஞ்சா
பொட்டலம் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து, யார் கடத்தி வந்தார்கள்
என விசாரிக்கின்றனர்.

