/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இரவில் அரளிச்செடியை வெட்டி சாய்த்த கும்பல்
/
இரவில் அரளிச்செடியை வெட்டி சாய்த்த கும்பல்
ADDED : ஆக 11, 2024 02:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, 13வது வார்டு கோம்பைக்காட்டை சேர்ந்த விவசாயி பிரபாகரன், 50. இவர் அரளி விவசாயம் செய்கிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு அவர் வயலில் புகுந்த மர்ம கும்பல், அரளி செடிகளை வெட்டி சாய்த்துள்ளனர்.
இதுகுறித்து பிரபாகரன் கூறுகையில், ''இரவு, 9:00 மணி வரை அரளி பறித்து விட்டு வீட்டுக்கு சென்றோம்.
பின் மழை பெய்தபோது, 50க்கும் மேற்பட்ட செடிகளை வெட்டி நாசப்படுத்தி உள்ளனர். தினமும், 5 கிலோ பூக்கள் கொடுக்கும் செடிகளை வெட்டியது வேதனை அளிக்கிறது. யார், எதற்கு வெட்டினார்கள் என தெரியவில்லை,'' என்றார்.

