/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பழைய பஸ் ஸ்டாண்டில் பராமரிப்பு இல்லாததால் பயணிகள் அவதி
/
பழைய பஸ் ஸ்டாண்டில் பராமரிப்பு இல்லாததால் பயணிகள் அவதி
பழைய பஸ் ஸ்டாண்டில் பராமரிப்பு இல்லாததால் பயணிகள் அவதி
பழைய பஸ் ஸ்டாண்டில் பராமரிப்பு இல்லாததால் பயணிகள் அவதி
ADDED : ஆக 27, 2024 05:07 AM
சேலம்: சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், நெருக்கடியை தவிர்க்க ஸ்மார்ட் சிட்டி திட்-டத்தின் கீழ், ரூ.96 கோடி மதிப்பில், இரண்டடுக்கு பஸ் ஸ்டாண்-டாக சீரமைக்கப்பட்டது.
அம்மாபேட்டை, அயோத்தியாபட்-டணம், வீராணம், வாழப்பாடி, கொண்டலாம்பட்டி, மகுடஞ்சா-வடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், தரை தளத்திலி-ருந்தும், அஸ்தம்பட்டி, ஐந்து ரோடு, இரும்பாலை, ஓமலுார் பஸ்கள் முதல் தளத்திலிருந்தும் இயக்கப்படுகின்றன.தரைதளத்தில் நான்கு புறங்களிலும் சுவர்கள் சூழ்ந்துள்ள-தாலும், ஜன்னல் உள்ளிட்டவை இல்லாததாலும், வெளிச்சம் மிக குறைவாக உள்ளது. பகல் நேரத்தில் கூட இருட்டாக அமைந்துள்-ளது. இங்குள்ள மின் விளக்குகள் பலவும் பழுதாகி, பல நாட்க-ளாகியும் மாற்றப்படாமல் உள்ளது.
இங்கு பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் அச்சத்துக்குள்ளாகின்-றனர். பல நேரங்களில் லிப்ட் இயங்குவதில்லை. தினமும் ஏராள-மான பயணிகள் வந்து செல்லும் இடத்தில், முறையான பராம-ரிப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

