/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
நதியின் குறுக்கே பாலம் இல்லாததால் இறந்தவர் உடலுடன் நீந்தும் அவலம்
/
நதியின் குறுக்கே பாலம் இல்லாததால் இறந்தவர் உடலுடன் நீந்தும் அவலம்
நதியின் குறுக்கே பாலம் இல்லாததால் இறந்தவர் உடலுடன் நீந்தும் அவலம்
நதியின் குறுக்கே பாலம் இல்லாததால் இறந்தவர் உடலுடன் நீந்தும் அவலம்
ADDED : டிச 24, 2025 06:45 AM

நெமிலி: விருதசீர நதியில் பாலம் இல்லாதததால், இறந்தவர் உடலை தண்ணீரில் எடுத்து செல்லும் அவல நிலை தொடர்கிறது.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகாவில், கணபதிபுரம் கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தில் இறந்தவர்களை உடலை, விருதசீரநதி கரை ஓரம் உள்ள மயானத்தில் புதைக்கவும், எரிக்கவும் செய்கின்றனர்.
தற்போது, விருதசீரநதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், நதிக்குள் இறங்கி மறு கரையில் உள்ள மயானத்திற்கு, இறந்தவரின் உடலை கொண்டு செல்ல வேண்டியுள்ளது.
கணபதிபுரத்தை சேர்ந்தவர் ஒருவர் நேற்றுமுன்தினம் இறந்து விட்டார். அவரின் உடலை, அவரது உறவினர்கள் விருதசீர நதியில், இடுப்பளவு நீரில் இறங்கி சென்று அடக்கம் செ ய்து விட்டு திரும்பினர்.
விருதசீரநதியில் தண்ணீர் செல்லும் போது, இறந்தவர்களின் உடலை எடுத்து செல்வதில், பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டி உள்ளது. எனவே, விருதசீர நதியில் பாலம் கட்டித்தர வேண்டும் என, கணபதிபுரம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

