/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
13 நாட்களாக மின்சாரமின்றி தவிப்பு அதிகாரிகளை கண்டித்து மறியல்
/
13 நாட்களாக மின்சாரமின்றி தவிப்பு அதிகாரிகளை கண்டித்து மறியல்
13 நாட்களாக மின்சாரமின்றி தவிப்பு அதிகாரிகளை கண்டித்து மறியல்
13 நாட்களாக மின்சாரமின்றி தவிப்பு அதிகாரிகளை கண்டித்து மறியல்
ADDED : டிச 10, 2024 08:01 AM
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே, 13 நாட்களாக மின்சாரமின்றி தவித்த கிராம மக்கள், அதிகாரிகளை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் அடுத்த மேலப்-புலம் பஞ்., உட்பட்ட, ராமாபுரம் பகுதியில், 300க்கும் மேற்-பட்டோர் வசிக்கின்றனர். பெஞ்சல் புயலால், அப்பகுதியில் பலத்த மழை பெய்ததில், கடந்த, 13 நாட்களாக டிரான்ஸ்பார்மர் பழுதாகி, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் குடிநீர் கூட கிடைக்காத நிலையில், பொதுமக்கள் அவதிப்பட்-டனர். மேலும், மின்மோட்டார்களை இயக்க முடியாமல், பயிர்க-ளுக்கு தண்ணீர் இறைக்க முடியாமல் பயிர்கள் கருகின. மாவட்ட நிர்வாகத்திற்கு
தகவல் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள்,
நேற்று பனப்-பாக்கம் ஓச்சேரி சாலையில், காலி குடங்கள் மற்றும் நெற் பயிர்-களை சாலையில் வைத்து
மறியலில் ஈடுபட்டனர். பனப்பாக்கம் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை
எடுப்பதாக கூறியதால், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

