/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாநில போட்டிக்கு தேர்வான மாணவர்கள்
/
மாநில போட்டிக்கு தேர்வான மாணவர்கள்
ADDED : நவ 05, 2024 05:04 AM
கமுதி: காரைக்குடியில் நான் முதல்வன் திட்டத்தில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு கமுதி சேர்ந்த மாணவர்கள் தேர்வாகி உள்ளனர்.
காரைக்குடி அழகப்பா பல்கலை இணைப்பு கல்லுாரிகளுக்கு இடையேயான தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தில் நுண்ணறிவு போட்டி நடந்தது. இதில் 31 கல்லுாரிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர்.
காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லுாரி முதல் பரிசு, கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவுக்கல்லுாரி 2ம் பரிசு பெற்றனர். இதனையடுத்து முதல் இரண்டு இடங்களை பெற்ற மாணவர்கள் மாநில அளவிலாக நடைபெறும் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவுக்கல்லுாரி மாணவர்கள் அரவிந்த், அசோக், விஜயராகவன் ஆகியோரை முதல்வர் தர்மர், பேராசிரியர்கள் மாணவர்கள் பாராட்டினர்.

