/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரோட்டோரத்தில் இடையூறாக கிடந்த மரக்கட்டைகள் அகற்றம் தினமலர் செய்தி எதிரொலி
/
ரோட்டோரத்தில் இடையூறாக கிடந்த மரக்கட்டைகள் அகற்றம் தினமலர் செய்தி எதிரொலி
ரோட்டோரத்தில் இடையூறாக கிடந்த மரக்கட்டைகள் அகற்றம் தினமலர் செய்தி எதிரொலி
ரோட்டோரத்தில் இடையூறாக கிடந்த மரக்கட்டைகள் அகற்றம் தினமலர் செய்தி எதிரொலி
ADDED : ஆக 23, 2025 11:37 PM

ராமநாதபுரம்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ராமநாதபுரம் ரயில்வே பீடர் ரோடு, ராமேஸ்வரம் ரோட்டில் மக்களுக்கு இடையூறாக கிடந்த மரக்கட்டைகள் அகற்றப்பட்டது.
ராமநாதபுரம் நகர், புறநகர் நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக வளர்ந்துள்ள மரக்கிளைகள், பட்டுப்போன மரத்தை வெட்டியுள்ளனர்.
பல நாட்களாக அகற்றப்படாமல் அப்படியே கிடப்பதால் வாகன போக்குவரத்தற்கு இடையூறு, மக்கள் நடந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர்.
மரக்கட்டைகளை சேகரித்து ஏலமிட வேண்டும், என நேற்றைய தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவில் ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாண்ட் ரோடு, ரயில்வே பீடர் ரோடு, ராமேஸ்வரம் ரோட்டில் மக்களுக்கு இடையூறாக கிடந்த மரக்கட்டைகள் அகற்றப்பட்டது.

