/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கைக்கு ரூ.1.50 கோடி கஞ்சா கடத்த முயன்றவர் கைது
/
இலங்கைக்கு ரூ.1.50 கோடி கஞ்சா கடத்த முயன்றவர் கைது
இலங்கைக்கு ரூ.1.50 கோடி கஞ்சா கடத்த முயன்றவர் கைது
இலங்கைக்கு ரூ.1.50 கோடி கஞ்சா கடத்த முயன்றவர் கைது
ADDED : டிச 15, 2025 02:19 AM

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே முள்ளிமுனை கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்படயிருந்த ரூ.ஒரு கோடியே 50 லட்சம் மதிப்புள்ள 170 கிலோ கஞ்சாவை மரைன் போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதி இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிகம் கடத்தப்படுகிறது.
நேற்று முன்தினம் அதிகாலை 1:00 மணிக்கு தொண்டி அருகே முள்ளிமுனை கடற்கரை காளி கோயில் ஆற்று முகத்துவாரம் அருகே கஞ்சா கடத்துவதாக மரைன் நுண்ணறிவு பிரிவு ஏட்டு இளையராஜாவிற்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி, எஸ்.ஐ., அய்யனார் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று மறைந்திருந்து கண்காணித்தனர்.
அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சா மூடைகளை தயார் நிலையில் அடுக்கி வைத்து இலங்கையிலிருந்து வரும் படகை எதிர்நோக்கி சிலர் காத்திருந்தனர். போலீசார் அருகே சென்ற போது கடத்தல்காரர்கள் தப்பி ஓடினர்.
அவர்களில் முள்ளிமுனையைச் சேர்ந்த துாண்டிகருப்புவை 38, கைது செய்து, ரூ. ஒரு கோடியே 50 லட்சம் மதிப்புள்ள 170 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

