sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சாயல்குடி பனை மரக்காட்டில் பதநீர் இறக்கும் பணி துவக்கம்

/

சாயல்குடி பனை மரக்காட்டில் பதநீர் இறக்கும் பணி துவக்கம்

சாயல்குடி பனை மரக்காட்டில் பதநீர் இறக்கும் பணி துவக்கம்

சாயல்குடி பனை மரக்காட்டில் பதநீர் இறக்கும் பணி துவக்கம்


ADDED : பிப் 14, 2024 06:01 AM

Google News

ADDED : பிப் 14, 2024 06:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயல்குடி, : -சாயல்குடி, அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மாசி முதல் வாரத்தில் பனை மரத்தில் இருந்து பதநீர் இறக்க வசதியாக ஓலைகளை களைந்து பாரமரித்து வருகின்றனர்.

சாயல்குடி சுற்றுவட்டார பகுதிகளில் பல லட்சம் பனை மரங்கள் உள்ளன.

மேலச்செல்வனுார், கீழச்செல்வனுார், காவாகுளம், மேலக்கிடாரம், கீழக்கிடாரம், பூப்பாண்டியபுரம், பெரியகுளம், மாரியூர், ஒப்பிலான், கடுகுசந்தை, சாயல்குடி, உறைகிணறு, நரிப்பையூர், கன்னிராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் பனைமரத் தொழிலை நம்பி பல ஆயிரம் குடும்பங்கள் உள்ளன.

பனை மரக்காடுகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் பதநீர் இறக்கி அவற்றை கருப்பட்டியாக காய்ச்சுவதற்காக பனை ஓலையில் குடிசை அமைத்து குடும்பத்துடன் தங்கி கருப்பட்டி தயாரிக்கும் தொழிலில் ஈடுபடுகின்றனர். மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி உள்ளிட்ட மாதங்களே பதநீர் சீசன் காலம்.

பதநீர் இறக்கும் தொழிலாளிகள் கூறியதாவது: பதநீரை வெறும் வயிற்றில் குடித்தால் உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி அளிக்கும். ஒரு லி., ரூ.80 முதல் 100 வரை விற்கப்படுகிறது.

தற்போது பனை மரத்தின் பக்கவாட்டு ஓலைகளை வெட்டி பதநீர் இறக்க வசதியாக தயார் செய்து வருகிறோம்.

கருப்பட்டி மருத்துவ குணம் வாய்ந்தது என்பதால் இதன் மகத்துவம் அறிந்து வெளிநாடுகளுக்கும் வெளி மாவட்டங்களுக்கும் ஏராளமானோர் ஆர்டரின் பேரில் வியாபாரிகளிடம் வாங்கிச் செல்கின்றனர்.

சாயல்குடி கருப்பட்டிக்கு எப்போதுமே தனி மவுசு உள்ளது என்றனர்.






      Dinamalar
      Follow us