sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மழையால் பருத்தி செடிகள் பாதிப்பு: விவசாயிகள் கவலை

/

மழையால் பருத்தி செடிகள் பாதிப்பு: விவசாயிகள் கவலை

மழையால் பருத்தி செடிகள் பாதிப்பு: விவசாயிகள் கவலை

மழையால் பருத்தி செடிகள் பாதிப்பு: விவசாயிகள் கவலை


ADDED : டிச 11, 2024 04:41 AM

Google News

ADDED : டிச 11, 2024 04:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி : கமுதி அருகே கொல்லங்குளம் கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள பருத்திச் செடிகளில் மழைநீர் தேங்கியதால் செடிகள் அழுகி வீணாவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கமுதி அருகே கொல்லங்குளம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு கால்நடை வளர்ப்பு, விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு மானாவாரி பயிராக நெல் விவசாயம் செய்கின்றனர். சில விவசாயிகள் மூன்றில் ஒரு பங்கு நிலத்தில் பருத்தி உள்ளிட்ட சிறுதானியப் பயிர்கள் விவசாயம் செய்கின்றனர்.

அவ்வப்போது பெய்த மழையால் நன்கு வளர்ச்சியடைந்து செடிகளில் பருத்தி காய்க்கத் துவங்கியது. சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் தண்ணீர் அதிகம் தேங்கியதால் செடிகள் அழுகியது.

விவசாயி ராமச்சந்திரன் கூறியதாவது:

கொல்லங்குளம் கிராமத்தில் பருத்தி விவசாயம் செய்கிறேன். மூன்று மாதங்களுக்கு முன்பு பயிரிடப்பட்ட பருத்திச் செடிகள் நன்கு வளர்ச்சி அடைந்து காய்கள் காய்த்தது. சில நாட்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த போது தொடர் மழையால் நிலத்தில் தண்ணீர் தேங்கியது.

காய்த்துள்ள பருத்தி வெடிக்காமல் அழுகியது. செலவு செய்த பணம் வீணாகி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us