ADDED : டிச 25, 2024 08:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை அருகே செலுகை கண்மாயில் மான்கள் கூட்டமாக வசிக்கின்றன. நேற்று அதிகாலை கண்மாயில் இருந்து வெளியேறிய இரண்டு வயது பெண் புள்ளி மான் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பாலக்குடி அருகே சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தது.
வனத்துறையினர் சென்று மானை மீட்டு கால்நடை டாக்டர் பரிசோதனைக்கு பின் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் புதைத்தனர்.

