/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தாய் மீது தாக்குதல் மகன் மருமகள் மீது வழக்கு
/
தாய் மீது தாக்குதல் மகன் மருமகள் மீது வழக்கு
ADDED : ஆக 28, 2025 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி : தொண்டி அருகே தினையத்துார் மேலக்குடியிருப்பை சேர்ந்தவர் லட்சுமி 57. இவருடைய வீடு அருகே மகன் தங்கதம்பி 35, காதல் திருமணம் செய்து கொண்டு மனைவியுடன் தனியாக வசித்து வரு கிறார்.
சொத்து கேட்டு தங்கதம்பி அடிக்கடி தாயுடன் தகராறு செய்தார். நேற்று முன்தினம் வயலில் லட்சுமி வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
அங்கு சென்ற தங்கதம்பி, இவரது மனைவி தீபா 34, இருவரும் சேர்ந்து கம்பால் தாக்கி, இரண்டரை தங்க செயினை பறித்துக் கொண்டனர்.
காயமடைந்த லட்சுமி திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். லட்சுமி புகாரில் தொண்டி போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர்.

