sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 படிவம் 6 பெற்ற 706 புதிய வாக்காளர்கள் ஜன.18 வரை அவகாசம் உள்ளது

/

 படிவம் 6 பெற்ற 706 புதிய வாக்காளர்கள் ஜன.18 வரை அவகாசம் உள்ளது

 படிவம் 6 பெற்ற 706 புதிய வாக்காளர்கள் ஜன.18 வரை அவகாசம் உள்ளது

 படிவம் 6 பெற்ற 706 புதிய வாக்காளர்கள் ஜன.18 வரை அவகாசம் உள்ளது


ADDED : டிச 25, 2025 05:22 AM

Google News

ADDED : டிச 25, 2025 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., பணிகள் நிறைவு பெற்று வரைவு பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் சிறப்பு வாக்காளர் முகாம் நடந்ததில் பரமக்குடி (தனி) தொகுதியில் 706 புதிய வாக்காளர்கள் சேர்வதற்கு படிவம் பெற்றுள்ளனர்.

பரமக்குடி(தனி) சட்ட சபை தொகுதியில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 350 வாக்காளர்கள் இருந்தனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நிறைவடைந்து 30,113 பேர் நீக்கப்பட்டு 2 லட்சத்து 27 ஆயிரத்து 237 பேர் உள்ளனர்.

தொடர்ந்து டிச., 21ல் நடந்த சிறப்பு வாக்காளர் முகாமில் 706 புதிய வாக்காளர்கள் சேர்க்கைக்கு படிவம் 6 பெற்று உள்ளனர்.

இதே போல் இறந்து போன வாக்காளர்களை நீக்கம் செய்ய படிவம் 7ஐ 16 பேரும் மற்றும் பெயர் அல்லது முகவரி திருத்தம் செய்ய படிவம் 6 ஐ 92 பேர் பெற்றுள்ளனர்.

முகாமில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தில் தவறுதலாக நீக்கம் செய்த பெயர் சேர்க்கவோ அல்லது தவறுதலாக சேர்க்கப்பட்ட பெயரை நீக்கவும், உறுதிமொழி பத் திரம் எந்த கட்சி பிரதி நிதிகள் இடமிருந்தும் பெறப்படவில்லை.

மேலும் படிவங்கள் பெற, பெயர் சேர்க்கை மற்றும் நீக்கல் செய்ய 2026 ஜன., 18 வரை அவகாசம் அளிக்கப் பட்டுள்ளது. இப்பணிகள் பிப்., 10ல் முடிவு பெற உள்ளது.

இதற்காக 4 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் உள்ள நிலையில், பெறப்படும் படிவங்களை விசாரிக்க கூடுதலாக 6 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்., 17ல் வெளியிடப்பட உள்ளது என ஆர்.டி.ஓ., சரவண பெருமாள் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us