/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் நடுக்கடலில் கைது
/
ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் நடுக்கடலில் கைது
ADDED : டிச 24, 2025 06:28 AM

ராமேஸ்வரம்: நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள், 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து, 480 விசைப்படகுகளில், டிச., 22ல் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், இந்திய - இலங்கை எல்லையில் மீன் பிடித்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படை வீரர்கள், துப்பாக்கியை காட்டி எச்சரித்து, மீனவர்களை விரட்டினர்.
அதில், தங்கச்சிமடம் ஜோதிபாஸ் படகை மடக்கி, பிரபாத், 27, சந்தியா, 33, ஜேம்ஸ் கெய்டன், 26, உட்பட, 12 மீனவர்களை கைது செய்து, வவுனியா சிறையில் நேற்று அடைத்தனர்.
அம்மீனவர்களை மீட்க, மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி, மீன் பிடிக்க செல்லாமல் இன்று வேலை நிறுத்தம் செய்வதாக, ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

