/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாணவி பாலியல் பலாத்கார வழக்கு விசாரணை ஏப்.8க்கு தள்ளிவைப்பு
/
மாணவி பாலியல் பலாத்கார வழக்கு விசாரணை ஏப்.8க்கு தள்ளிவைப்பு
மாணவி பாலியல் பலாத்கார வழக்கு விசாரணை ஏப்.8க்கு தள்ளிவைப்பு
மாணவி பாலியல் பலாத்கார வழக்கு விசாரணை ஏப்.8க்கு தள்ளிவைப்பு
ADDED : ஏப் 01, 2024 10:03 PM
ராமநாதபுரம் : பரமக்குடியை சேர்ந்த பள்ளி மாணவி பலாத்கார வழக்கில் முன்னாள் அ.தி.மு.க., நிர்வாகி உள்பட 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். நீதிபதி கோபிநாத் வழக்கை ஏப்., 8 க்கு தள்ளி வைத்தார்.
பரமக்குடியில் 9-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பரமக்குடி 3--வது வார்டு கவுன்சிலரும் அ.தி.மு.க முன்னாள் நகர் அவைத்தலைவருமான சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர், தனியார் ஜவுளி நிறுவன உரிமையாளர் ராஜாமுகமது மற்றும் புரோக்கர்களாக செயல்பட்ட அன்னலட்சுமி உமா, கயல்விழி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டு 5 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர்.
இவர்களில் அ.தி.மு.க., நிர்வாகி சிகாமணிக்கு ராமநாதபுரம் மாவட்டம் மகிளா நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.
சிகாமணிக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்யக்கோரி சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் கீதா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
நீதிபதி இளங்கோவன், சிகாமணிக்கு கீழ்கோர்ட்டு வழங்கிய ஜாமினை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து சிகாமணி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
புரோக்கர்களாக செயல்பட்ட அன்னலட்சுமி உமா, கயல்விழி ஆகியோருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமின் வழங்கியது.
இந்நிலையில் மாணவி பலாத்கார வழக்கு விசாரணை நேற்று ராமநாதபுரம் கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நடந்தது.
சிகாமணி உள்பட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி கோபிநாத் வழக்கு விசாரணையை ஏப்.8க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

