/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு மே 24க்கு தள்ளிவைப்பு
/
மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு மே 24க்கு தள்ளிவைப்பு
மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு மே 24க்கு தள்ளிவைப்பு
மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு மே 24க்கு தள்ளிவைப்பு
ADDED : மே 07, 2024 11:19 PM
ராமநாதபுரம்,: பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில்முன்னாள் அ.தி.மு.க., நிர்வாகி உட்பட 5 பேர் மீதான வழக்குவிசாரணையை ராமநாதபுரம் விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் மே 24க்கு தள்ளி வைத்தார்.
பரமக்குடியில் 9ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பரமக்குடி 3 வது வார்டு கவுன்சிலரும் அ.தி.மு.க., முன்னாள் நகரஅவைத்தலைவருமான சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர்பிரபாகர், ஜவுளிக்கடை உரிமையாளர் ராஜாமுகமது, புரோக்கராக செயல்பட்டஅன்னலட்சுமி உமா, கயல்விழி ஆகியோரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டது. 5 பேரையும் போலீஸ்காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த வழக்கில் சிகாமணிக்கு ராமநாதபுரம் மகிளா நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. சிகாமணி ஜாமினை ரத்து செய்யக்கோரி சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் கீதா உயர் நீதிமன்ற மதுரை கிளையில்மனுத் தாக்கல் செய்தார். நீதிபதி இளங்கோவன் ஜாமினை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து சிகாமணி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. புரோக்கர்களாக செயல்பட்ட அன்னலட்சுமி உமா, கயல்விழி ஆகியோருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமின் வழங்கியுள்ளது.மாணவி பலாத்கார வழக்கு நேற்று ராமநாதபுரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில்விசாரணைக்கு வந்தது. நீதிபதி கோபிநாத் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் வழக்கை மே 24க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

