sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

படிக்கட்டு உடைந்த அரசு பஸ் பயணிகள் நடுவழியில் அவதி

/

படிக்கட்டு உடைந்த அரசு பஸ் பயணிகள் நடுவழியில் அவதி

படிக்கட்டு உடைந்த அரசு பஸ் பயணிகள் நடுவழியில் அவதி

படிக்கட்டு உடைந்த அரசு பஸ் பயணிகள் நடுவழியில் அவதி


ADDED : ஏப் 02, 2024 11:49 PM

Google News

ADDED : ஏப் 02, 2024 11:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்:ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துாரில் இருந்து பரமக்குடிக்கு இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ் பின்பக்க படிக்கட்டு உடைந்து விழுந்தது. அதனால் இறக்கிவிடப்பட்ட பயணிகள் நடுவழியில் அவதிப்பட்டனர்.

முதுகுளத்துார் பஸ்ஸ்டாண்டில் இருந்து '2 ஏ' என்ற அரசு டவுன் பஸ் துாவல், பாம்பூர் வழியாக பரமக்குடிக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதில் காலை, மாலையில் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் ​செல்கின்றனர். குறிப்பாக மாலையில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

நேற்று மாலை முதுகுளத்துார் பஸ்ஸ்டாண்டில் இருந்து புறப்பட்ட பஸ் இங்கு போலீஸ் ஸ்டேஷன் அருகே சென்ற போது பின்பக்கம் உள்ள படிக்கட்டு உடைந்து விழுந்தது.

அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதில் பயணித்த மாணவர்கள் மற்றும் பொதுமக்களை பாதி வழியில் இறக்கிவிட்டு டிப்போவுக்கு எடுத்துச் சென்றனர். இதனால் அவதிப்பட்ட அவர்கள் வேறுவழியின்றி உதவி கேட்டு மற்ற வாகனங்களிலும், ஆட்டோவிலும், நடந்தும் சென்றனர். இதுபோன்ற பிரச்னைகள் இனி ஏற்படுவதை தடுக்க பஸ் பராமரிப்பு, ஆய்வு அவசியம் என வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us