/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
புதுகை மாநகராட்சியுடன் இணைய எதிர்ப்பு; கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்
/
புதுகை மாநகராட்சியுடன் இணைய எதிர்ப்பு; கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்
புதுகை மாநகராட்சியுடன் இணைய எதிர்ப்பு; கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்
புதுகை மாநகராட்சியுடன் இணைய எதிர்ப்பு; கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்
ADDED : ஏப் 29, 2024 11:33 PM

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களான திருமலைராயசமுத்திரம், திருக்கட்டளை, முள்ளூர், 9ஏ நத்தம் பண்ணை, தேக்காட்டூர் உள்ளிட்ட ஊராட்சிகளை இணைத்து, புதுக்கோட்டை நகராட்சியை, மாநகராட்சியாக கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக அரசு அறிவித்தது.
அதை அந்த ஊர் மக்கள் விரும்பவில்லை. எதிர்ப்பு தெரிவித்து, பல கட்ட போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில் நேற்று, திருமலைராயசமுத்திரம் ஊராட்சி மற்றும் திருக்கட்டளை ஊராட்சியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர், புதுக்கோட்டை - - பட்டுக்கோட்டை சாலை மேட்டுப்பட்டி மற்றும் கேப்பறை பஸ் ஸ்டாப் அருகே, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பகுதி மக்கள் கூறியதாவது:
தற்போது, ஊராட்சியாக இருக்கும் போது வீட்டு வரி, சொத்து வரி மிகக் குறைவாக செலுத்தி வருகிறோம். மாநகராட்சியோடு இணைக்கப்பட்டால், சொத்து வரி, வீட்டு வரி அதிகரிக்கக்கூடும். நுாறு நாள் வேலை கிடைப்பது பாதிக்கப்படும்.
எங்கள் ஊராட்சிகளில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாமல், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வரும் நாங்கள், எப்படி அளவுக்கு அதிகமாக சொத்து வரி, வீட்டு வரி அதிகமாக செலுத்த வேண்டி வரும்.
எங்கள் ஊராட்சி, ஊராட்சியாகவே இருக்க வேண்டும். மாநகராட்சியோடு இணைக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து, நாங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். இவ்வாறு கூறினர்.
இன்று, முள்ளூர் ஊராட்சியில் அப்பகுதி மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

